search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய வீட்டில் பொருட்கள் திருடிய 6 பேர் கைது
    X

    புதிய வீட்டில் பொருட்கள் திருடிய 6 பேர் கைது

    • புதிய வீட்டில் பொருட்கள் திருடிய 6 பேரை கைது செய்தனர்.
    • கே.கே. நகரில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டார்.

    மதுரை

    எஸ்.ஆலங்குளம், குமரன் நகரை சேர்ந்தவர் பால் பெஞ்சமின் (30). இவர் கட்டுமான மேற்பார்வையாளராக உள்ளார். கே.கே. நகரில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டார். சம்பவத்தன்று காலை ஊழியர்கள் வெளியே சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த இரும்பு வெட்டும் எந்திரம், டைல்ஸ் வெட்டும் எந்திரம் ஆகிவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் டைல்ஸ் வெட்டும் மிஷின், இரும்பு வெட்டும் எந்திரம் பறிமுதல் செய்யப்ப ட்டது. இதுதொ டர்பாக ஆழ்வார்புரம் ஆசைதம்பி (27), ஜெய்ஹிந்த்பு ரம் மணிகண்டன் (29), நாராய ணசெட்டி தெரு விஜய் (37), காக்கா தோப்பு கண்ணன் (40), ராஜகம்பீரம் பாலமுருகன் (8), ஒத்தக்கடை செல்வராஜ் (58) ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×