search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பிரமுகர் மகன் சாவு
    X

    அ.தி.மு.க. பிரமுகர் மகன் சாவு

    • விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மகன் பரிதாபமாக இறந்தார்.
    • திருமங்கலம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உளள் டி.அரசப்பட்டியை சேர்ந்தவர் அ.தி.மு.க. நிர்வாகி கருப்பு. இவரது மகன் சரத்குமார் (வயது 26). கட்டிட தொழிலாளியான இவருக்கு புவனா என்ற மனைவியும், 7மாத பெண் குழந்தையும் உள்ளனர்.சரத்குமார் தற்போது கப்பலூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்த சகோதரர் வீட்டு கிரகப் பிரவேச நிகழ்ச்சியில் சரத்குமார் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அன்று இரவு விசேஷத்திற்கு வந்த உறவினர் ஒருவரை அரசபட்டியில் மோட்டார் சைக்கிளில் சரத்குமார் அழைத்துச் சென்றார்.

    அங்கு அவரை இறக்கி சென்று விட்டு மீண்டும் சரத்குமார் கப்பலூருக்கு புறப்பட்டார். திருமங்கலம் -உசிலம்பட்டி சாலை சந்திப்பு இடத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த நெற்கதிர் அறுவை செய்யும் எந்திர வாகனம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரத்குமார் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்க லம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×