search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும்-செல்லூர்ராஜூ
    X

    அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும்-செல்லூர்ராஜூ

    • மதுரை-வாடிப்பட்டியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும் என செல்லூர்ராஜூ-ஆர்.பி.உதயகுமார் அறிக்கை விடுத்துள்ளனர்.
    • காலை 9.30 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க பகுத்தறிவு பகலவன், காஞ்சி தந்த தங்கம் பேரறிஞர் அண்ணா வின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் படுகிறது.

    நாளை காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு இன்னாள், முன்னாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், மாவட்ட நிர்வாகி கள், பகுதி, வட்ட நிர்வாகி கள், சார்பு அணி நிர்வாகி கள், முன்னாள், இன்னாள் கூட்டுறவு, உள்ளாட்சி பிரதி நிதிகள், முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று பேரறிஞர் பெருந்தகைக்கு மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் அவர் கூறியுள்ளார்.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமியின் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வாடிப்பட்டியில் உள்ள பேறிஞர் அண்ணாவின் சிலைக்கு நாளை (வெள்ளிக் கிழமை)காலை 9.30 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

    ஆகவே இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள், மாநில நிர்வாகி கள், மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், கிளை, வட்ட நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகளும் மற்றும் செயல்வீரர்களும், செயல்வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    Next Story
    ×