search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவிழாவுக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு
    X

    திருவிழாவுக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு

    • திருவிழாவுக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மதுரை

    மதுரை மேல வெளி வீதி ெரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் முதியவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து மேலமதுரை கிராம உதவியாளர் பழனி கொடுத்த புகாரின்பேரில் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். விசாரணையில் இறந்த முதியவர் சிவகாசி முஸ்லிம் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(63) என்பதும், சித்திரை திருவிழா பார்ப்பதற்காக மதுரைக்கு வந்திருந்தபோது ெரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்ததும் தெரியவந்தது.

    Next Story
    ×