search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு
    X

    திருமங்கலம் அருகே எடப்பாடி பழனிசாமிக்கு பேரவை சார்பில் வரவேற்பு அளிக்கப்படும் இடத்தை முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

    • எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • திருமங்கலம் வழியாக சிவகாசி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    திருமங்கலம்

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை நடைபெறும் பொது கூட்டங்களில் பங்கேற்கிறார்.

    இதற்காக நாளை காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். திருமங்கலம் வழியாக சிவகாசி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இதனையொட்டி திரும ங்கலம், மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, கள்ளிக்குடி வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் எழுச்சி மிக்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் நாளை வரவேற்பு அளிக்கும் இடங்களான மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, கள்ளிக்குடி பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    முன்னதாக சிவரக்கோ ட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு சென்றனர். அவர்களை முன்னாள் அமைச்சர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, ஒன்றிய கவுன்சிலர்கன் சிவரக்கோட்டை ஆதிராஜா, உச்சப்பட்டி செல்வம், பேரவை நகர செயலாளர் பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×