search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
    X

    போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

    • போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
    • ஏலத்தில் பங்கேற்போர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை கைவசம் வைத்து இருக்க வேண்டும்

    மதுரை

    மதுரை மாநகர போலீ சார் பறிமுதல் செய்த 29 மோட்டார் சைக்கிள்கள், 3 ஆட்டோ மற்றும் 3 கார்கள் உள்பட 35 வாகனங்கள் கிரைம் பிராஞ்ச் போலீஸ் கிளப் வளாகத்தில் உள்ளது. இவை வருகிற 19-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளது.

    இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வருகிற 17-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இரு சக்கர வாகனத்துக்கு ரூ.2000, ஆட்டோ மற்றும் காருக்கு தலா ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

    அதற்கு முன்பாக இன்று (15-ம் தேதில் மற்றும் 16, 17ந் தேதிகளில் வாகனங்களை நேரில் பார்வையிடலாம். வருகிற 19-ம் தேதி நடக்கும் ஏலத்தில் பங்கேற்போர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை கைவசம் வைத்து இருக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×