search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக கண்காட்சி
    X

    புத்தக கண்காட்சி

    • புத்தக கண்காட்சி தொடங்குகிறது.
    • புத்தக கண்காட்சியில் சிறுவர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூடல் மாமதுரையில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகின்ற செப்டம்பர் 3-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மதுரை தமுக்கம் கலை அரங்கத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

    தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் ஏறக்குறைய 200 புத்தக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்பட உள்ளது.

    தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்களும் நடைபெற உள்ளன. வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் இந்த புத்தக கண்காட்சியில் சிறுவர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×