search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அண்ணனை கொலை செய்த தம்பி கைது
    X

    அண்ணனை கொலை செய்த தம்பி கைது

    • அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
    • தாய் மாரியம்மாள் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை விராட்டிபத்து அரிஜன காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.கொத்தனார். இவரின் தம்பி திரவியம். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் திரவியம் சம்பவத்தன்று நள்ளிரவு குடிபோதையில் தெருவில் நின்று தகராறு செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட பாலமுருகன் தம்பியை கண்டித்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆத்திரத்துடன் சென்ற திரவியம் வேல் கம்புடன் வந்து அண்ணன் பாலமுரு கனை சரமாரியாக தாக்கி னார். இதில் பாலமுருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார்.

    இது தொடர்பாக பால முருகனின் தாய் மாரியம்மாள் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து திரவியத்தை கைது செய்தார்.

    Next Story
    ×