என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
- அவனியாபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- மாணவி தற்கொலை குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வழி விட்டான். இவரது மனைவி மீனாம்பாள். இவரது மகள் மீனாட்சி (வயது 14). இவர் அங்கு உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
மீனாட்சிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் அவரை பெற்றோர் படிக்கச் சொல்லி கட்டாயப்படு த்தியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மீனாட்சி தனது உட லில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி மாணவி மீனாட்சி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி தற்கொலை குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அவனியாபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்