search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தொண்டர்கள் கலந்து கொண்டனர்

    மதுரை

    மதுரை விளாங்குடியில் மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பட்டியலணி தலைவர் சிவாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    விளாங்குடி பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில தலைவர் சிவாஜி பேசுகையில், விளாங்குடி செம்பருத்தி நகரில் மாநகராட்சி நிர்வாகம் அனுபவம் இல்லாத ஊழியர்களை பாதாள சாக்கடை தோண்டுதல், பைப் பதித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுத்துகிறது.

    அங்கு அரைகுறையாக பணிகள் நடந்து வரு கின்றன. இதனால் பொதுமக்களும் முதியோர்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அவசர உதவிக்கு 108 ஆம்புலன்சு கூட வர முடியவில்லை.

    விளாங்குடியில் அனுபவம் இல்லாத வர்களுக்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அனுபவம் உள்ள நபர்களிடம் பணிகளை ஒப்படைக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஆண்- பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்

    Next Story
    ×