என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?
- பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி? பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அதிகாரிகள் விழிப்புணர்வு நடந்தது.
- இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
மதுரை
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதையொட்டி விபத்துகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து, படுகாயம் உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தீயணைப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணியபுரம் குருகுலம் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பெரியார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் போலீசார், பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிப்பது? தீக்காயம் ஏற்பட்டால் எவ்வாறு சிகிச்சை அளிப்பது? குடிசை பகுதியில் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது, பட்டாசு வெடி விபத்தில் இருந்து சிறுவர்கள் மற்றும் முதியோரை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்