search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மதுரை ரயில் நிலையத்தில் சுதந்திர தின செல்பி பாயிண்ட்
    X

    புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    மதுரை ரயில் நிலையத்தில் சுதந்திர தின செல்பி பாயிண்ட்

    • மதுரை ெரயில் நிலையத்தில் சுதந்திர தின செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் உற்சாகம் கண்டுகளித்தனர்.
    • நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களிலும் செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை ரெயில் நிலையத்தில் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுவதை வலியுறுத்தி "செல்பி பாயிண்ட்" அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் திரண்டு வந்து ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து சென்றனர்.

    மதுரை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களிலும் செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பொதுமக்கள் குடும்பத்துடன் ரெயிலின் மேற்கூரை, பெட்டிகளின் இணைப்பு பகுதிகளில் சிரமப்பட்டு பயணம் செய்த துயர சம்பவங்களின் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. இதுவும் பார்வையாளர்களை கவர்ந்தது.

    புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பேரையூர், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் அழகம் பெருமாள் (வயது 98) பேசுகையில், "எனக்கு அப்போது 18 வயது. மதுரை ரெயில் நிலையம் எதிரே கடந்த 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டேன். இதற்காக எனக்கு ஆங்கிலேய அரசு, 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. கர்நாடக மாநிலம் அலிபுரம் சிறையில் அவதிப்பட்டேன். மதுரை ரெயில் நிலைய 75-வது சுதந்திர அமுதப்பெருவிழா நிகழ்ச்சியில், 80 ஆண்டு–களுக்கு பிறகு மீண்டும் கலந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது" என்றார்.

    நிகழ்ச்சியில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன், உதவி அதிகாரி ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே திருவனந்தபுரம் கோட்ட சாரண- சாரணியரின் வாகன பேரணி மதுரை வந்தது. மதுரை கோட்டம் சார்பில் ரெயில்வே மேலாளர் பத்மநாதன் அனந்த் கொடியை பெற்றுக் கொண்டார்.

    மதுரை கோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் வாகன பேரணி திருச்சிக்குப் புறப்பட்டு சென்றது. மதுரை ரெயில் நிலையத்தில் சுதந்திர தின அமுதப் பெருவிழா வினாடி- வினா போட்டி, ஆட்சி மொழி அதிகாரி சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் வர்த்தக பிரிவு ஊழியர்கள் கிருஷ்ணன், முருகப் பொற்பாண்டியன், நிதி பிரிவு அமுதா ஆகியோரின் அணி முதல் பரிசு பெற்றது.

    Next Story
    ×