search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார், கணக்கர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி 17 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 17-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், மே 22-ந் தேதி கம்பத்தில் திருவிழா கொடியேற்ற நிகழ்வும், மே 30-ந் தேதி பால்குடம், தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும், மே 31-ந் தேதி பூக்குழி விழாவும், ஜூன் 6-ந் தேதி தேரோட்டமும், ஜூன் 7-ந் தேதி வைகையாற்றில் தீர்த்தவாரி விழாவும் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார், கணக்கர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் 3 மாத கொடிக்கம்ப நிகழ்ச்சியின் உபயதாரர் ராசு காவல் குடும்பத்தினர் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×