search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ்காரர் வீட்டில் நகை-பணம் திருட்டு
    X

    போலீஸ்காரர் வீட்டில் நகை-பணம் திருட்டு

    • போலீஸ்காரர் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
    • கருப்பாயூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    திருமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி நடராஜ் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது43). இவர் மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி மதுரை ஆவினில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.

    கணவன்-மனைவி வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ. 2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கருப்பாயூரணி கங்கைபுரம் 2-வது தெருவை சேர்ந்த போஸ் மகன் காவேரி (41). இவர் குடும்பத்துடன் சொந்த ஊரான திருப்புவனத்துக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அவர் கருப்பா யூரணி வீட்டிற்கு விரைந்து வந்தார்.

    அப்போது பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்தையும், வெள்ளி நகைகளையும் மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கருப்பா யூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×