search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மோட்டார் சைக்கிள்-கார் மோதல்
    X

    மாரியப்பன்

    மோட்டார் சைக்கிள்-கார் மோதல்

    • மதுரை அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஏ.தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்( வயது 47), ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு திருமேனி என்ற மனைவி யும், ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று மாரி யப்பன் மோட்டார் சைக்கி ளில் டி.கல்லுப் பட்டிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். டி.குன்னத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து ராஜ பாளையம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் தலையில் பலத்த காய மடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×