என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
என்.எஸ்.எஸ்.முகாம்
- எஸ்.என்.கல்லூரியில் என்.எஸ்.எஸ்.முகாம் நடந்தது.
- விஜயகுமார் வரவேற்று பேசினார்.
மதுரை,
மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக ஏழு நாள் சிறப்பு முகாம் வலையங்குளம், குசவன்குண்டு மற்றும் சோளங்குருணி கிராமங்களில் நடைபெற்றது.
முகாமின் தொடக்க விழாவில் திட்ட அலுவலர் விஜயகுமார் வரவேற்று பேசினார். முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார்.
வலையங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனசேகரன், சித்த மருத்துவர் லதா ராணி, சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி, ரூட்செட் மைய இயக்குநர் சுந்தராச்சாரி, ஒருங்கிணைப்பாளர் கோகிலா, விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் கோபிநாத் பேசினர்.
நிறைவு விழாவில் திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் கண்ணன், கல்லூரியின் சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி கலந்து கொண்டனர்.
மாணவர்கள் கிராமங்களில் உள்ள ஊரணிகளை சுத்தம் செய்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். திட்ட அலுவலர்கள் ராமகிருஷ்ணன், இருளப்பன் முகாமிற்குரிய ஏற்பாடுகளை செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்