என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓ.பி.எஸ்.சின் திருச்சி மாநாடு அ.தி.மு.க.வுக்கு திருப்புமுனை-கோபாலகிருஷ்ணன்
- ஓ.பி.எஸ்.சின் திருச்சி மாநாடு அ.தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும் என மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
- மாநாடு நடைபெறுகிறது.
மதுரை
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் திருச்சியில் வருகிற 24-ந்தேதி அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு நடை பெறுகிறது.
இந்த மாநாட்டிற்கு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க வசதியாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசி பெற்ற தொண்டர்களின் காவலர் முன்னாள் முதல்- அமைச்சர், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தலைமை யில் திருச்சியில் வருகிற 24-ந்தேதி 5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் 125 வாகனங்களில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கி றோம். இதற்காக வருகிற 24-ந்தேதி காலை 11 மணிய ளவில் மதுரை நகர் பகுதி யில் இருந்து அனைத்து வாகனங்களும் ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகே ஒன்றிணைந்து திருச்சியை நோக்கி புறப்படுகிறோம்.
திருச்சி மாநாடு அ.தி.மு.க. வரலாற்றில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வம் தலைமையில் கட்சி தொண்டர்கள் அணி வகுத்து விட்டார்கள் என்ற புதிய திருப்புமுனையை நிச்சயம் ஏற்படுத்தும்.
இந்த மாநாட்டில் மதுரை, விருதுநகர், சிவ கங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து சுமார் 5 லட்சத்திற் கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொண்டர்களை நேரில் சந்திக்க முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்