search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர்கள் வெள்ளத்தில் நடந்த திருமறைநாதர் கோவில் தேரோட்டம்
    X

    திருவாதவூர் திருமறைநாதர் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    பக்தர்கள் வெள்ளத்தில் நடந்த திருமறைநாதர் கோவில் தேரோட்டம்

    • மதுரை அருகே திருவாதவூரில் திருமறைநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட கோவிலில் வருடந்தோறும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அப்போது சுற்றுவட்டா ரத்தை சேர்ந்த திரளான கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலை சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் மேலூரில் உள்ள மண்டக படியில் எழுந்த ருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    திருவாதவூர் திருமறைநாதர் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. காலை 9 மணியளவில் திருமறைநாதர் பிரியாவிடையுடன் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரிலும், வேதநாயகி அம்பாள் சட்ட தேரிலும் எழுந்தருளினர்.

    அதன்பின் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 9.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். கோவில் ரத வீதியில் பக்தி கோஷத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. காலை 10.15 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. தேரோ ட்டத்தில் மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்க ணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×