search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமலிங்க சவுடேசுவரி அம்மன் கோவில் விழா
    X

    ராமலிங்க சவுடேசுவரி அம்மன் கோவில் விழா

    • ராமலிங்க சவுடேசுவரி அம்மன் கோவில் விழா
    • பக்தர்கள் நேர்த்திக்கடன் வேண்டுதலுக்காக கத்தியுடன் உடலில் அடித்துக் கொண்டே ஊர்வலமாக வந்தனர்.

    மதுரை

    வில்லாபுரம் மீனாட்சிநகரில் தேவாங்கர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட ராமலிங்க சவுடேசுவரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கரக உற்சவ விழா மற்றும் கத்தி போடும் விழா இன்று நடந்தது. 24-ம் ஆண்டு விழாவையொட்டி வைகை ஆற்றில் இருந்து சவுடேசுவரி அம்மனை கும்பத்தில் அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடன் வேண்டுதலுக்காக கத்தியுடன் உடலில் அடித்துக் கொண்டே ஊர்வலமாக வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலாளர் ராஜேசுவரி, தலைவர் ராமராஜ், பொருளாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×