search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.10 லட்சம் மோசடி: வியாபாரி கைது
    X

    மோசடி செய்த சதீஷ்

    ரூ.10 லட்சம் மோசடி: வியாபாரி கைது

    • வாகனங்களை விற்று தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • என்னை ெதாடர்பு கொண்ட சதீஷ் லாரியை அதிகவிலைக்கு விற்று தருவதாக கூறினார். நான் அவரிடம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள லாரியை ஒப்படைத்தேன்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி, சிவகங்கை மாவட்டம் கன்னிவாசல் முனிசிபல் தெருவை சேர்ந்த சண்முகம் ஆகிேயார் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

    அதில், கார்மற்றும் லாரி வாங்கி, விற்றுதருவதாக மதுரை வியாபாரி ஒருவர் ரூ.10 லட்சம் மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் முதல் கட்டமாக புகார் கொடுத்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    இதில் செல்லப்பாண்டி கூறும்போது, மதுரை பார்க் டவுன் விஸ்வநாததாஸ்புரம் மணல்மேடு தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 36), சேகர் ஆகிய 2 பேர் என்னை தொடர்பு கொண்டு, நான் உங்களுக்கு குறைந்த விலையில் கார் வாங்கி தருகிறேன் என்று தெரிவித்தார்.

    அதனை நம்பி அவரிடம் ரூ.5 லட்சத்து 36 ஆயிரம் கொடுத்தேன். அதனை பெற்றுக்கொண்ட அவர், கார் வாங்கி தர வில்ைல. பணத்தை திருப்பிக்கேட்டபோது ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் மட்டும் கொடுத்தார். மீதம் தர வேண்டிய ரூ.2 லட்சத்தை தரமுடியாது என்று கூறிவிட்டார்.

    அவரிடம் நான் தொடர்ந்து பணம் கேட்ட தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார் என்று தெரிவித் தார்.

    பின்னர் சண்முகம் கூறும்போது, நான் லாரியை விற்பதற்கான முயற்சியில் இருந்தேன். அப்போது என்னை ெதாடர்பு கொண்ட சதீஷ் லாரியை அதிகவிலைக்கு விற்று தருவதாக கூறினார். நான் அவரிடம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள லாரியை ஒப்படைத்தேன். ஆனால் அவர் லாரியை விற்றுத்தரவில்லை.

    எனவே அவரிடம் லாரிைய திருப்பி கேட்டேன். ஆனால் அவர் திருப்பித்தர மறுத்து விட்டார் என்று தெரிவித்தார்.

    பின்னர் 2 பேர்களிடம் மோசடியில் ஈடுபட்ட சதீசை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் அவர் புகார் செய்த 2 பேரிடமும் இருந்து ரூ.10 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து சதீசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×