search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்
    X

    மதுரையில் உள்ள மேற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி கிடக்கிறது.

    ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்

    • ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
    • 7 அலுவலர்கள் மீது வழங்கப்பட்ட குற்றச்சாட்டு ஆணையை திரும்ப பெற வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் 500- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்ற னர். இந்த நிலையில் அவர்கள் பல்வேறு கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி, தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். இதில் உடன்பாடு எட்டப்பட வில்லை.

    இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வலி யுறுத்தி இன்று (20-ந் தேதி) ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது. அதன்படி இன்று காலை ஊரக வளர்ச்சி துறையின் ஒட்டுமொத்த ஊழியர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், "மேலூர் ஊராட்சி ஒன்றியம் சருகுவளை யப்பட்டி கிராம ஊராட்சியில் பிரதமருக் கான திட்டப் பணிகளை செயல்படுத்திய 7 அலு வலர்கள் மீது வழங்கப்பட்ட குற்றச்சாட்டு ஆணையை திரும்ப பெற வேண்டும்,

    மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அளவில் பணி யிடை நீக்கம் செய்யப்பட்ட 4 ஊராட்சி செயலாளர்களுக்கு மீண்டும் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், பணியிட மாறுதல் கோரிய அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அளவில் இதுவரை நிலுவையில் உள்ள குற்றச்சாட்டு ஆணைகளை இறுதி செய்ய வேண்டும், விடுமுறை நாட்களில் நேரில் மற்றும் காணொளி வாயிலாக நடத்தப்படும் ஆய்வு கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×