search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோலார் பேனல் திருட்டு; 3 பேர் கைது
    X

    சோலார் பேனல் திருட்டு; 3 பேர் கைது

    • சோலார் பேனல் திருடிய 3 பேரை கைது செய்தனர்.
    • பாக்கியம் மகன் பூபதி (20), தினேஷ்குமார் (26), முருகேசன் மகன் கார்த்திக் (18) என்பது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள எரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் மாடியில் சோலார் பேனல் அமைக்கப்பட்டிருந்தது. இதனை சம்பவத்தன்று மர்ம நபர்கள் திருடினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் திருடர்களை விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், மைக்கேல் பாளையம், பாக்கியம் மகன் பூபதி (20), தினேஷ்குமார் (26), முருகேசன் மகன் கார்த்திக் (18) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்தில் சோலார் பேனல் திருடியதாக, மேற்கண்ட 3 பேரையும் விக்கிரமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் மதுரை வளையப்பட்டி யாதவர் தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் தோட்டத்தில் மின்மோட்டாரை திருடியதாக சத்திர வெள்ளாளபட்டியை சேர்ந்த சுமலி என்பவரை பாலமேடு போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×