search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பள்ளி-கல்லூரி அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
    X

    பள்ளி-கல்லூரி அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

    • பள்ளி-கல்லூரி அரசு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையினர் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கென பள்ளி மற்றும் கல்லூரி என 2 நிலைகளில் தனித்தனியே விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    குறிப்பாக பள்ளி விடுதி களில் 20 மாணவர் விடுதி, 8 மாணவிகள் விடுதிகளும், கல்லூரி விடுதிகளில் 4 மாணவர் விடுதி, 3 மாணவி கள் விடுதிகளும் உள்ளன.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ- மாணவிகளும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள்.

    விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ- மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படு கின்றனர்.

    விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் வழங்கப்படு கின்றன. பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பி டத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந் தாது.

    தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங் களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிக ளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலு வலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப் பாளர்/காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவல கத்தில் வருகிற 15-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை 15.7.2023-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×