search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் ரவிக்கு தமிழக அரசு சரியான பாடம் புகட்ட வேண்டும்
    X

    பசும்பொன் பாண்டியன்

    கவர்னர் ரவிக்கு தமிழக அரசு சரியான பாடம் புகட்ட வேண்டும்

    • கவர்னர் ரவிக்கு தமிழக அரசு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
    • பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக் கறிஞர் பசும்பொன் பாண்டி யன் கூறியதாவது:-

    பேரறிஞர் அண்ணா ஆட்டுக்கு தாடியும், நாட் டுக்கு கவர்னரும் தேவை யில்லை என்று தீர்க்கதரிசன மாக அன்றே உரைத்தார். அவரது கருத்துக்கு சான்றாக தமிழக கவர்னர் ரவியின் செயல்பாடு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கவர்னர் எந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி நட வடிக்கை எடுத்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த அவர் தயாராக இல்லை.

    தமிழகத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆளுநர் மாளி கையில் அரசியல் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கவர்னர் ரவி நினைக்கிறார். அவரது இந்த மக்கள் விரோத செயல் பாடுகளுக்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆளுநர் மாளிகை அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. எனவே தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் மாளிகைக்கு மின்சாரம், தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.போலீஸ் பாதுகாப்பையும் திரும்ப பெற வேண்டும்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறும் கவர்னர் ரவிக்கு உடனடியாக தமிழக அரசு சரியான பாடம் புகட்ட வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×