search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மனைவியை கத்தியால் குத்தியவர் கைது
    X

    மனைவியை கத்தியால் குத்தியவர் கைது

    • மனைவியை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.

    மதுரை

    வில்லாபுரம் வேலு தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 25). இவரை சந்திராதேவி (27) என்பவர், 2-வதாக திருமணம் செய்துள்ளார். துரைப்பாண்டிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்று துரைப்பாண்டி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த துரைப்பாண்டி சந்திராதேவியை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.

    மதுரை கண்மாய் கரையைச் சேர்ந்தவர் ராஜா (39). சம்பவத்தன்று இரவு இவர் காந்திபுரம் சென்றார். அங்கு வந்த 5 பேர் கும்பல், அவரிடமிருந்து அரிவாள் முனையில் ரூ.550-ஐ பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திபுரம் ராமு மகன் பிரகாஷ் (23), பாஸ்கரன் மகன் பூனை மணிகண்டன் (19), மருதுபாண்டியர் தெரு முத்துப்பாண்டி மகன் சேது பாண்டி (18), சீர்காழி மகன் சிவகுருநாதன் (19), வீரகாளியம்மன் கோவில் தெரு கார்த்திக் (23) ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×