என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
- மதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய மற்றொரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.
மதுரை
மதுரை அண்ணாநகர், எஸ்.எம்.பி காலனியை சேர்ந்த சக்திவேல் மகன் முரளி (வயது22). இவரது சகோதரர் ஜோதி குமார். இவரது குழந்தை நேற்று மாலை எஸ்.எம்.பி காலனி, மாரியம்மன் கோவில் அருகே விளையாட சென்றது. அந்த குழந்தைக்கும், இதே பகுதியில் வசிக்கும் இன்னொரு குழந்தைக்கும் தகராறு ஏற்பட்டது. எனவே முரளி சமரசம் செய்வதற்காக சென்றார்.
அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த துரைப்பாண்டி (40), அவரது மகன் தமிழ்ச்செல்வன், காளிதாஸ் ஆகியோர் முரளியை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இதுகுறித்து முரளி கொடுத்த புகாரின் பேரில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர். இதே வழக்கில் துரைப்பாண்டி மனைவி வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முரளி, அவரது சகோதரர் ஜோதிகுமார், வளையாபதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்