search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
    X

    வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

    • மதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய மற்றொரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர், எஸ்.எம்.பி காலனியை சேர்ந்த சக்திவேல் மகன் முரளி (வயது22). இவரது சகோதரர் ஜோதி குமார். இவரது குழந்தை நேற்று மாலை எஸ்.எம்.பி காலனி, மாரியம்மன் கோவில் அருகே விளையாட சென்றது. அந்த குழந்தைக்கும், இதே பகுதியில் வசிக்கும் இன்னொரு குழந்தைக்கும் தகராறு ஏற்பட்டது. எனவே முரளி சமரசம் செய்வதற்காக சென்றார்.

    அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த துரைப்பாண்டி (40), அவரது மகன் தமிழ்ச்செல்வன், காளிதாஸ் ஆகியோர் முரளியை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இதுகுறித்து முரளி கொடுத்த புகாரின் பேரில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர். இதே வழக்கில் துரைப்பாண்டி மனைவி வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் முரளி, அவரது சகோதரர் ஜோதிகுமார், வளையாபதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×