என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ரோட்டில் கிடந்த பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த ஏட்டு
- ரோட்டில் கிடந்த பணத்தை போலீஸ் நிலையத்தில் ஏட்டு ஒப்படைத்தார்.
- தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் பாராட்டினார்.
மதுரை
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கடந்த 26-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது தபால்தந்தி நகருக்கு செல்லும் வழியில் அவர் வைத்திருந்த பணப்பையில் இருந்து ரூ.36 ஆயிரத்து 500 தவறி விழுந்துவிட்டது. இதுபற்றிஅறிந்த நவநீதகிருஷ்ணன் அவர் சென்ற வழியில் தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு பொன்னுராஜ் என்பவர் ரோட்டில் கிடந்த பணக்கட்டை கண்டெடுத்தார். அதில் ரூ.36 ஆயிரத்து 500 இருந்தது. அதனை அவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அது நவநீதகிருஷ்ணன் தவற விட்ட பணம் என்பது தெரியவந்ததால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தவற விட்ட பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த பொன்னுராஜை, தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் பாராட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்