search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் தக்காளி விலை தொடர்ந்து உச்சம்
    X

    மதுரையில் தக்காளி விலை தொடர்ந்து உச்சம்

    • தக்காளி விலை தொடர்ந்து உச்சம் அடைந்துள்ளது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    மதுரை

    தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.150 வரை விற்கப் பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி விலை பெரிய அளவில் குறையவில்லை.

    மேலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள வடமாநில வியாபாரிகள், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்க ளில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மதுரை மாட்டுத்தாவணி, பரவை மார்கெட்டுகளுக்கு வரும் தக்காளியின் வரத்து அதிகரிக்கவில்லை.

    இதனால் விலை பெரிய அளவில் குறையவில்லை. மார்க்கெட்டுகளுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதிக்கும் கீழ் குறைந்து விட்டது.

    இதையடுத்து மொத்த விற்பனை கடைகளில் தக்காளி விலை உச்சத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இன்று மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதனால் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விலை உச்சத்திலேயே தொடர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற கணக்கிலேயே வாங்கு கின்றனர். மேலும் சமையலுக்கு தக்காளியை சிக்கன மாக பயன்படுத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×