search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 150-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்துக்கழக தலைமையகம் முன்பு அனைத்து ஊழியர் சங்கங்களின் சார்பில் இன்று அதிகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.டி.பி. சங்கத்தின் பொருளாளர் தங்கையா தலைமை தாங்கினார்.

    எல்.பி.எப். சங்கம் இளங்கோ ,பி.எம்.எஸ். சங்கம் விஜயகுமார், சி.ஐ.டி.யு. துணை பொதுச் செயலாளர் செல்வராஜ், டி.டி.எஸ்.எப். சங்க பீமராஜ், டி.யூ.சி.சி. சங்கம் வேல்முருகன், ஐ.என்.டி.யூ.சி. ஜான், ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் மணிசேகர் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் கனகசுந்தர், துணை பொதுச்செய லாளர் டி.கே. முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து புறநகர் கிளையில் ஏற்க னவே கொடுத்து கொண்டு இருந்த பணி நேரத்தை குறைக்கக்கூடாது. அனைத்து பணி நேரங்க ளையும் பணி நேரமாக வழங்க வேண்டும். பணி குறைப்புக்கு வவுச்சராக வழங்கக்கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் 150-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×