search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 இடங்களில் தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்
    X

    2 இடங்களில் தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்

    • 2 இடங்களில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி தெய்வகன்னி தெருவை சேர்ந்தவர் உடச்சி (வயது 45), முட்டை வியாபாரி.

    இவர் நேற்று இரவு மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ரிப்பேர் ஏற்பட்டது. உடனே உடச்சி ரிங்ரோடு பஸ் நிலையம் அருகே, வாகனத்தை நிறுத்தி ரிப்பேர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் உடச்சி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை நிலையூர், ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (39). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிள் நிறுத்தி இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்முருகன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார்.

    இருந்தபோதிலும் வாகனம் முழுமையாக கருகியது. இது தொடர்பாக வேல்முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×