search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை அரிவாளால் வெட்டிய வாலிபர்
    X

    மனைவியை அரிவாளால் வெட்டிய வாலிபர்

    • மனைவியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    மதுரை

    மதுரை கோமதிபுரம், சபரி தெருவை சேர்ந்தவர் பானுமதி (வயது 36). இவருக்கும், கணவர் சரவணன் என்பவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சரவணன் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்தார்.

    அப்போது பானுமதி மற்றும் அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் அன்பு ஆகிய 4 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், பானுமதியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றார்.

    இது தொடர்பாக பானுமதி கொடுத்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில் சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், பானுமதி மற்றும் அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×