search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்விரோதத்தில் தாக்குதல் நடத்திய வாலிபர் கைது
    X

    முன்விரோதத்தில் தாக்குதல் நடத்திய வாலிபர் கைது

    • முன்விரோதத்தில் தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ஜெகதீசன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் கோட்டை தெருவை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் வேலுமணி (25). இவரது நண்பர்கள் பாலமுருகன், தெய்வேந்திரன், மருதுபாண்டி. இவர்கள் அடிக்கடி மெக்கானிக் ஷாப்பில் மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் மது அருந்துவது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த3 பேரும் மெக்கானிக் வேல் மணியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து வேலுமணி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகன், தேவேந்திரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மருதுபாண்டியை தேடி வருகின்றனர்.

    மதுரை தெப்பக்குளம் கேட்டலாக் ரோடு ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் (45). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இருள்ராஜ் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெகதீசனை வழிமறித்து இருள்ராஜ் பாட்டிலால் தாக்கி உள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜெகதீசன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு இருள்ராஜை கைது செய்தனர்.

    Next Story
    ×