search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஊட்டியில் வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது
    X

    ஊட்டியில் வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது

    • நண்பர்கள் 2 பேரும் மதுகுடித்து விட்டு வந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேசை கைது செய்தனர்.

    ஊட்டி,

    ஊட்டி காந்தல் சிலேட்டர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர்கள் லோகேஷ் (வயது 33), பிரசாந்த் (23). இவர்கள் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் பீர் பாட்டிaலால் பிரசாந்தை தாக்கினார்.

    மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பிரசாந்த் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லோகேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×