search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே  திருமணமான பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது
    X

    திருக்கோவிலூர் அருகே திருமணமான பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது

    • திருமணமான 33 வயது பெண்ணிடம் ரவிச்சந்திரன் (வயது 42) நட்பாக பழகி வந்தார்
    • இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தில் திருமணமான 33 வயது பெண் வசித்து வந்தார். இவரிடம் அரியலூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ரவிச்சந்திரன் (வயது 42) நட்பாக பழகி வந்தார். இது நாளடைவில் கள்ளக்கா தலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். அந்த நேரத்தில் ரவிச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த செல்போனில் இதனை வீடியோக எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் செய்வது தவறு என்பதை உணர்ந்த இளம்பெண் ரவிச்சந்திரனுடன் பழகுவதை நிறுத்தினார். அவரது செல்போன் அழைப்புகளையும் ஏற்கவில்லை. இது தொடர்பாக தனது கணவரிடம் கூறி மன்னிப்பு கேட்டு, அவருடன் திருந்தி வாழ்ந்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக அந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்ட ரவிச்சந்திரன், நீயும், நானும் உல்லாசமாக இருந்த வீடியோ என்னிடத்தில் உள்ளது. நீ என்னுடன் உல்லாசமாக இருக்க வரவில்லை எனில் இந்த வீடியோவை சமூக வளைதளங்களில் வெளியிடுவேன். இதனை வெளியில் சொன்னாலோ, போலீசில் புகார் கூறினாலோ உன்னையும், உனது கணவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன இளம்பெண், நடந்ததை தனது கணவரிடம் கூறியுள்ளார். அவர் அளித்த தைரியத்தில் இது குறித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். இந்த புகாரினை போலீசார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றி விசாரிக்க பரிந்துரைத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெ க்டர் ராதிகா இது தொட ர்பாக விசாரணை நடத்தி னார். இதில் இளம்பெ ண்ணுக்கு தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர். உடனடியாக அரியலூர் கிராமத்திற்கு விரைந்த மகளிர் போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×