search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது
    X

    தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

    • இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • பிரபாகரன் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது, வடபாகம் கருப்பட்டி சொசைட்டி சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (29) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    உடனே தனிப்படை போலீசார் பிரபாகரனை கைது செய்து அவரிடமிருந்த 750 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×