search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் அருகே வாலிபரிடம் செல்போன், பணம் பறித்தவர் கைது
    X

    கோப்பு படம்.

    பெரியகுளம் அருகே வாலிபரிடம் செல்போன், பணம் பறித்தவர் கைது

    • பஸ்சுக்காக காத்திருந்தபோது அவ்வழியாக வந்தவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்துச்சென்றார்.
    • இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பெரியகுளம்:

    கோவை சூளுர்பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(28). இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டிக்கு வந்துள்ளார். பின்னர் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தபோது அவ்வழியாக வந்த ரூபன்(21) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்துச்சென்றார். இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ரூபனை கைது செய்தனர்.

    இதேபோல் கூடலூர் அருகே புலிக்குத்தியை சேர்ந்தவர் முருகன்(52). கவரிங் நகை விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். அண்ணாநகர் பொதுக்கழிப்பிடம் அருகே நடந்து சென்றபோது அருண்(21), சிராஜ்(24), பிரபாகரன் ஆகியோர் அவரை மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அருண், சிராஜை கைது செய்தனர். தப்பிஓடிய பிரபாகரனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×