search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் கைது
    X

    வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் கைது

    • சேலம் நெத்திமேடு காமராஜ் நகர் கே.பி.கரடு பகுதியை சேர்ந்தவரை போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர்.
    • இதைத்தொடர்ந்து தலைமறைவான மூர்த்திக்கு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற எண் 4 நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் நெத்திமேடு காமராஜ் நகர் கே.பி.கரடு பகுதியை சேர்ந்தவர் சேட்டு மகன் மூர்த்தி (வயது 25). இவரை கடந்த 2020-ம் ஆண்டு சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஜாமினில் வெளிவந்த மூர்த்தி அதன்பிறகு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார்.இதைத்தொடர்ந்து தலைமறைவான மூர்த்திக்கு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற எண் 4 நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதை தொடர்ந்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை மூர்த்தியை கைது செய்தனர்.

    Next Story
    ×