என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உலோக சிலைகளை கண்டுபிடித்து கோயில்களில் ஒப்படைக்க வேண்டும்
- 63 நாயன்மார்கள் உலோக சிலைகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பழமையான விலை உயர்ந்த சாமி படங்கள், விலை மதிப்பு மிக்க நகைகள் இருந்ததாக தகவல்.
- மடத்தின் நிர்வாகி ஒருவரிடம் கேட்கும் போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறார்.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்ட அனைத்து இந்து கூட்டமைப்பு சார்பில் அனுமன் சேனா கட்சியின் மாநில பொது செயலாளர் பாலா, அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம.நிரஞ்சன், அகில பாரத இந்து ஆன்மீக பேரவை மாநில இளைஞரணி பொது செயலாளர் கண்ணன், சிவசேனா தஞ்சை மாவட்ட நிர்வாகி குட்டி சிவகுமார் ஆகியோர் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம் மகாமககுளம் அருகே உள்ள மவுன சாமிகள் மடம் கடந்த 1843-ம் ஆண்டு முதல் பக்தர்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.
இதற்கு முன்பாக இந்த மடம் 63 நாயன்மார்கள் மடமாக இருந்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியை சேர்ந்த மவுன சாமிகள் இந்த மடத்தில் ஜீவ சமாதி அடைந்த பிறகு 63 நாயன்மார்கள் மடம் மவுன சாமிகள் மடம் என பெயர் மாற்றம் பெற்றது.
இந்த மவுன சாமிகள் மடத்துக்கு சுவாமி விவேகானந்தர் வந்து சென்றுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற இந்த மடத்தில் பழமையான விலை மதிப்பு மிக்க 63 நாயன்மார்கள் உலோக சிலைகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பழமையான விலை உயர்ந்த சாமி படங்கள், விலை மதிப்பு மிக்க நகைகள் இருந்ததாக தகவல்கள் தெரிய வருகிறது. ஆனால் தற்போது இந்த விலைமதிப்பு மிக்க உலோக சிலைகள், நகைகள் இந்த மடத்தில் இல்லை.
இதுகுறித்து இந்த மடத்தின் நிர்வாகி ஒருவரிடம் கேட்கும் போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறார். இது பக்தர்களுக்கு பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
எனவே மவுன சாமிகள் மடத்தில் இருந்ததாக கூறப்படும் விலை உயர்ந்த உலோக சிலைகள், தங்க நகைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி அவற்றை கண்டுபிடித்து கோயில்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்