search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மே தின பொதுக்கூட்டம்
    X

    கூட்டத்தில், கொட்டும் மழையிலும் தம்பிதுரை எம்.பி.பேசினார்.

    மே தின பொதுக்கூட்டம்

    • மே தின விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி.கலந்துகொண்டு, கொட்டும் மழையிலும் குடைபிடித்தவாறு, கூட்டத்தில் பேசினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், ஓசூர் ஜூஜூவாடியில் நேற்று மே தின விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக, கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி.கலந்துகொண்டு, கொட்டும் மழையிலும் குடைபிடித்தவாறு, கூட்டத்தில் பேசினார்.

    மேலும் இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பர்கூர் சி.வி.ராஜேந்தி ரன், ஆகியோர் பேசினர்.

    மேலும் இதில், மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சியினர், தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    Next Story
    ×