என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மனநலம் பாதிக்கப்பட்டவர் கிணற்றில் விழுந்து சாவு
- வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.
- கிணற்றில் பிணமாக மிதந்தார்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாவேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். வனத்துறையில் பணியாற்றி இறந்து விட்டார். இவருடைய மகன் இளமதி தமிழ்செல்வன் (25).இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த 7 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி நாசன்கொட்டாய் பகுதியில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.
அதனை அரூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரது உறவினர்கள் வந்து பார்த்தனர். அப்போது இறந்து போனது இளமதி தமிழ்செல்வன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்