search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மேட்டூர் சக்தி காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா
    X

    வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி விழா நடைபெற்ற போது எடுத்த படம். 

    மேட்டூர் சக்தி காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா

    • பழைய மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள சக்தி காளி யம்மன், சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • 29-ந் தேதி இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் பழைய மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள சக்தி காளி யம்மன், சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி கொடி யேற்றுதல் மற்றும் பூச்சாற்று தல், நந்தா தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 29-ந் தேதி இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    4-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து முப்போடு அழைத்தல், 5-ந் தேதி காவிரி ஆற்றில் இருந்து சக்தி அழைத்தல், பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து வந்து சூரசம்காரம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்கள் கருவறைக்குள் சென்று தாங்களாக அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை காவிரி ஆற்றில் இருந்து அக்னி கிரகம், மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று காலை பூ மிதித்தல் மற்றும் சாமிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. இரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப அலங்காரத்துடன் சாமி திருவீதி உலா மற்றும் வான வேடிக்கை நடைபெற்றது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகத்தா குப்புசாமி தலைமையில் கோவில் நிர்வாக கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×