search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்- அமைச்சர் வழங்கினார்
    X

    அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

    அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்- அமைச்சர் வழங்கினார்

    • தஞ்சை மாவட்டத்தில் 23,208 மாணவர்களுக்கு ரூ.11 கோடியே 79 லட்சத்து 14 ஆயிரத்து 180 மதிப்பில் மிதிவண்டிகள் இந்த ஆண்டில் வழங்கப்பட உள்ளது.
    • அரசு மற்றும் அரசு உதவி பெறும் 10 பள்ளிகளை சேர்ந்த 2,488 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக தஞ்சை அரண்மனை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவிகளுக்கு இளையெல்லாம் மிதிவண்டி களை வழங்கினார்.

    தஞ்சையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 10 பள்ளிகளை சேர்ந்த 2488 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

    அப்போது அவர் தஞ்சை மாவட்டத்தில் 23208 மாணவர்களுக்கு ரூ.11 கோடியே 79 லட்சத்து 14 ஆயிரத்து 180 மதிப்பில் வேலை எல்லாம் மிதிவண்டிகள் இந்த ஆண்டில் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்திரா, ஸ்ரீகாந்த், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் சிவகுமார், முதன்மை மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவி அலுவலர்கள் பழனிவேலு (மேல்நிலை) , மாதவன் (இடைநிலை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×