search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவ, மாணவிகள் 497 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் -அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்
    X

    மாணவ, மாணவிகள் 497 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் -அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்

    • மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சப்-கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெ.மூர்த்தி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் தமிழ்ச்செல்வம், சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பால்வளத்துறை சா.மு. நாசர், கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 497 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினர்.

    பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆப்தாபேகம், சமீமாரஹீம், கல்பனாபார்த்திபன், அபிராமி, ஜீவா, கோகுலகிருஷ்ணன், திருபுரசுந்தரி, சுமலதாநரேஷ், இந்துமதி, கோல்ட் மணி, வெங்கடேசன், ஒன்றிய திமுக செயலாளர்கள் சந்திரசேகர், பொன்னுசாமி, மாவட்ட பிரதிநிதி சீனிவாசன் செட்டி, ஒன்றிய பிரதிநிதி மோகன்பாபு, தலைமை ஆசிரியர்கள் லோகநாத், சுலோச்சனா மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×