search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் பெயரை சொல்லி அமைச்சர் உதயநிதி மாணவர்களை ஏமாற்றுகிறார்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கு
    X

    நீட் பெயரை சொல்லி அமைச்சர் உதயநிதி மாணவர்களை ஏமாற்றுகிறார்- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கு

    • சூலூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
    • எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார்.

    சூலூர்,

    சூலூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி முன்னிலை வகித்தார். சூலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் கார்த்திகை வேலன் வரவேற்றார்.

    அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநில தலைவர் மற்றும் பூத் கமிட்டி மேலிட பார்வையாளர் சேதுராமன் கல்நது கொண்டார். கூட்டத்தில் பங்கேற்க வந்த எஸ்.பி.வேலுமணிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் 10 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மாலை கிரேன் மூலம் அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

    அமைச்சர் உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினர் பெண்களு க்கான இட ஒதுக்கீடு குறித்து இப்போது தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்களுக்கு 50 சதவீதம் உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயல லிதா. அதன் மூலம் கோவை மாவட்ட ஊராட்சித் தலைவராக சாந்திமதி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது வரலாறு.

    தற்போதைய தி.மு.க. ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு புதிதாக எந்த திட்டமும் கொண்டு வரப்பட வில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் அதிகமான திட்டங்கள் கோவை மாவட்டத்துக்கும், சூலூர் தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திறந்து வைத்து திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது.

    நீட் பெயரை சொல்லி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவர் படிப்பில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக சாலைகள், பாலங்கள் கோவை மாவட்டத்துக்கு புதிதாக கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டம் கொண்டு வரப்பட்டு 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 சதவீத பணியை முடிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.

    சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என விலை வாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. எனவே எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார். இவ்வாறு அவர் கூறினார்.

    சூலூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் நன்றி கூறினார். கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் தோப்பு அசோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல், வக்கீல் பிரிவு கந்தநாதன், சூலூர் நகர துணை செயலாளர் அங்கண்ணன், சூலூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அங்கமுத்து, கலங்கல் ஊராட்சி முன்னாள் தலைவர் நடராஜ், சண்முகம், மீனவரணி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், வக்கீல் பிரிவு பிரபு ராம், கண்ணம்பாளையம் வார்டு உறுப்பினர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×