search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    போடி அருகே மாயமான முதியவர் சாவு
    X

    கோப்பு படம்.

    போடி அருகே மாயமான முதியவர் சாவு

    • அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி போலீசில் அவரது மனைவி புகார் அளித்தார்.
    • இந்த நிலையில் தேவாரம் ஓவுலாபுரம் பெட்ரோல் பங்க் பகுதியில் அவர் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியை சேர்ந்தவர் பொன்னையா. (வயது 73). சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி போலீசில் அவரது மனைவி பவுன்தாய் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் தேவாரம் ஓவுலாபுரம் பெட்ரோல் பங்க் பகுதியில் பொன்னையா மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரை மீட்டு உத்தமபாளைம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னையா உயிரிழந்தார்.

    இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×