search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதவித்தொகை கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
    X

    உதவித்தொகை கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

    • கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • பஸ் பயணம், வங்கி கடன் உள்ளிட்ட பயன் கிடைக்காமல் உள்ளது.

    சேலம்:

    மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் துறையின் மூலமாக வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500 மற்றும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி துறை மூலமாக வழங்கக்கூடிய உதவிக்காக ரூ.2000 கேட்டு விண்ணப்பித்து பயனாளிகளை தேர்வு செய்து ஓராண்டுக்கு மேலாகியும் ஆயிரக்கணக்கான பேருக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

    மாவட்டம் முழுவதும் மாற்றித்திறனாளிகள் உதவி தொகை கேட்டு விண்ணப்பம் செய்ய செல்லும்போது சர்வர் வேலை செய்யவில்லை என காரணங்களை சொல்லி திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

    இதனை கண்டித்தும், உதவித்தொகை வழங்க கோரியும் மாற்றுத்திறனாளிகள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அவருடைய உடல் ஊன தன்மைகேற்ப வேலை வழங்க வேண்டும் எனவும் அதுவும் 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் முறையான ஊதிய வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் இங்கு பல ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்க மறுத்து வருகின்றனர் . இதுகுறித்து அதிகாரிகளும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி வழங்க கேட்டு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் கொடுத்தனர். ஆனால் அதில் சிலருக்கு மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளி விண்ணப்பித்தால் உடனடியாக வீட்டுமனை வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த யூ.டி.ஐ.டி. கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே கார்டு வந்துள்ளது. இதனால் பஸ் பயணம், வங்கி கடன் உள்ளிட்ட பயன் கிடைக்காமல் உள்ளது. எனவே கலெக்டர் மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அவர்களிடம் தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×