search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சின்னசேலம் அருகே  மோட்டார் சைக்கிள் விபத்து- தொழிலாளி பலி
    X

    சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து- தொழிலாளி பலி

    • கணபதி (வயது 45) இவர் தனது சொந்த வேலை காரணமாக செல்லும்போது, நாராயணன் (50) என்பவர் மோட்டார் சைக்கிளை திடீரென பிரேக் போட்டதால் கணபதி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
    • கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கணபதி இறந்து போனார்

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி (வயது 45) . இவர் தனது சொந்த வேலை காரணமாக கச்சிராயபாளையம் சென்று மீண்டும் தொட்டியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு செல்ல தொட்டியம் சுண்ணாம்பு ஓடை அருகே செல்லும் பொழுது கணபதி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்ற பெரியசிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் நாராயணன் (50) என்பவர் மோட்டார் சைக்கிளை திடீரென பிரேக் போட்டதால் கணபதி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கணபதிக்கு பலத்த அடிபட்டு மூக்கு மற்றும் காதில் ரத்தம் வந்துள்ளது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் கணபதியை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கணபதி இறந்து போனார். இது குறித்து கணபதியின் மகன் ஸ்ரீராம் (23) கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×