search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மோட்டார் சைக்கிள், மொபட் திருட்டு
    X

    கோவையில் மோட்டார் சைக்கிள், மொபட் திருட்டு

    • சாலமன் பாரிஸ் தனியார் ஆஸ்பத்திரி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
    • இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை கருப்பராயன் கோவில் வசந்தம் நகரை சேர்ந்தவர் சாலமன் பாரிஸ்(27). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (56). ஒர்க் ஷாப் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை-சத்தி ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு சென்றார்.

    ெமாபட்டை வணிக வளாகத்துக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மொபட் மாயமாகி இருந்தது. இதுகுறி்த்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×