search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் மோட்டார் சைக்கிள் திருட்டு
    X

    காரைக்காலில் மோட்டார் சைக்கிள் திருட்டு

    • பிள்ளைத்தெருவாசல் சாலை அருகே தனது ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி மேற்கொண்டார்.
    • பல இடங்களில் கடந்த சில நாட்களாக தேடியும் கிடைக்காததால் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பச்சூரைச்சேர்ந்தவர் தியாகு. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்துவரும் இவர், கடந்த 12-ந் தேதி, பிள்ளைத்தெருவாசல் சாலை அருகே தனது ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி மேற்கொண்டார். சிறிது நேரம் சென்று மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிள் இல்லை. பல இடங்களில் கடந்த சில நாட்களாக தேடியும் கிடைக்காததால் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடிசென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×