search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு; வாலிபர் கைது
    X

    மோட்டார் சைக்கிள்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

    பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு; வாலிபர் கைது

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர்.
    • 21 மோட்டார் சைக்கிள்களை திருடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பலபகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போனது.

    இது குறித்து போலீசாருக்கு புகார் வந்தது.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    இந்நிலையில் கால் டாக்ஸி பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் இளைய ராஜா தலைமையில் போலீசார்கள் நரசிம்ம பாரதி. ரமேஷ்குமார்.

    அசோக் குமார் செந்தில்குமார் கார்த்திக் விஜயகுமார் உட்பட தனி பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மயிலாடுதுறை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர் கீழையூர் சதீஷ்குமார் (வயது 28) என்பதும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுப்பட்டதும் தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் 21 மோட்டார் சைக்கிள்கள் சுமார் 20 லட்சத்திற்கு மதிப்புடைய திருடி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×